Wednesday, July 21, 2010

தலைப்பில்லா கவிதைகள்




அழகாக இருக்கலாம்
ஆனாலும்
தேனைத் தேடி மட்டும்தான்
அலைகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்
இலைகள் அதற்கு பொருட்டல்ல.

*   *  *

மரத்திலிருந்து
உதிர முடிவு செய்த இலையே
உனை நம்பி
முதுகில் அமர்ந்த
காலைப் பனித்துளிக்கு
என்ன பதில்?
*  * *

நள்ளிரவு
முழு மழைக்கு பின்னதான
காலை நேர
சன்னல் திறப்பில்
முகத்தில் தெரித்த
முதல் மழைத்துளி
கேட்டது காதலுடன்
இரவெல்லாம் தட்டியும்
ஏன் கதவை திறக்கவில்லையென்று

1 comment:

VELU.G said...

தலைப்பில்லையென்றாலும் ஒவ்வொரு கவிதையும் பேசுகின்றன,

மிக அருமை