அழகாக இருக்கலாம்
ஆனாலும்
தேனைத் தேடி மட்டும்தான்
அலைகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்
இலைகள் அதற்கு பொருட்டல்ல.
* * *
மரத்திலிருந்து
உதிர முடிவு செய்த இலையே
உனை நம்பி
முதுகில் அமர்ந்த
காலைப் பனித்துளிக்கு
என்ன பதில்?
* * *
நள்ளிரவு
முழு மழைக்கு பின்னதான
காலை நேர
சன்னல் திறப்பில்
முகத்தில் தெரித்த
முதல் மழைத்துளி
கேட்டது காதலுடன்
இரவெல்லாம் தட்டியும்
ஏன் கதவை திறக்கவில்லையென்று
1 comment:
தலைப்பில்லையென்றாலும் ஒவ்வொரு கவிதையும் பேசுகின்றன,
மிக அருமை
Post a Comment