Thursday, August 26, 2010

அக்கறை

வெடிவிபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை
40
என்றார்கள் ஒரு சானலில்.
35
என்றது ஒரு தமிழ் செய்திதாள்.
அரசாங்கத்தின் நேற்றைய
அதிகாரப் பூர்வ அறிவிப்பான 15
பதிவு செய்திருந்தது
உண்மையை மட்டும் விளம்பும்
ஆங்கில நாளேடு.
சிதிலங்களை டிவியில்
பார்த்த பக்கத்து வீட்டு மாமா
நூறுக்கும் மேல இருக்கும்
என கருத்தை சொன்னார்.
நடந்தது அருகில் இல்லாதவரை...
இறந்தவர்கள் தெரிந்தவர்களாயில்லாதவரை..
எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ
முடிகிறது சுலபமாக.

2 comments:

VELU.G said...

உண்மை தான் நண்பரே

rudras prasadams said...

very true