Monday, September 17, 2012

தலைப்பற்ற கவிதைகள்

ஒப்பனைகளற்ற
உன் முகத்தை
சகித்துக் கொள்ளும்
மனிதர்களின்
நடிவில்தான்
பரிபூரண சுதந்திரத்தை
நீ உணர இயலும்
அதற்கு
உன்னுள் இருக்கிறதா
ஒப்பனைகளற்ற பிறர் முகங்களை
சகிக்கும் தன்மை?

_____________________________________

பட்டகாயங்களை
மறைக்க ஒப்பனைகளும்
காயமே இனிபடாது
என்ற கற்பனைகளும்
உள்ள வரை
முன்னோக்கி நகரும்
வாழ்க்கை

________________________________

அழுது கொண்டிருக்கும்
மனிதர்களை விட
அழுது முடித்து
சிறிதாக கண்ணீரை
சுமந்து கொண்டிருக்கும்
விழிகள்
அதிகம் உணர்த்துகின்றன
வலியை.

__________________________________________

No comments: