Tuesday, April 27, 2004

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்

என்னுடைய பழைய கவிதைகளையும், அந்த கவிதைகளுக்கு சொந்தக்காரனாய் இருந்து என்னுள்ளே காணாமல் போய் விட்ட கவிஞனையும் தட்டி எழுப்பலாம் என்ற நம்பிக்கையுடனும்,

என் மேல் கொண்டுள்ள பேரன்பாலும்,

தமிழில் உள்ளீடு செய்வதை பற்றி கற்று கொடுத்த ஸ்ரீமான் சுந்தர்ராஜனுக்கு

நான் வழங்குவது "கடவுள்" பட்டம்.

உன்னுடைய நம்பிக்கையை நிறைவேற்ற,

என்னுள்ளே மூழ்கி, மயங்கிக் கிடக்கும் இலக்கிய ரசிகனை (???) கண்டுபிடிக்கும் முயற்சி -இந்த வலைப்பூ.

தமிழ் வளர்த்த / வளர்க்கும் இதயங்களின் ஆசிகளை வேண்டி

அன்புடன்

ராஜ்குமார்

No comments: