Wednesday, May 12, 2004

முரள் எறிதரன்

இவர் உலக சாதனை செய்ததில் எனக்கு எவ்வித சந்தோசமும் எழவில்லை. இலங்கை நண்பர்கள் என் மேல் கோபம் கொள்ளலாம். சாதனைகள் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டு இருப்பது அவசியம் என்பது எனது கருத்து.

ஆசிய கிரிக்கெட் வலுவாகவுள்ள காலக்கட்டத்தில் விளையாட நேர்ந்தது இவருடைய அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் இவரை என்றோ வீட்டுக்கு அனுப்பி இருப்பார்கள்.விதிமுறை மீற்ல்களை விஞ்ஞான ரீதியில் நியாயப்படுத்துவது விளையாட்டுக்கு ஒவ்வாது.இந்த நிலை நீடித்தால் உடல் உறுப்புகள் பாதிககப்பட்டவர்களின் விளையாட்டாக கிரிக்கெட் மாறிவிடும்.

பாடுபட்டு கவிதைமயமான ஆக்சனுடன் மாங்கு மாங்கென்று பந்து வீசி "வால்ஷ்" எடுத்த விக்கெட்டுக்களை, இந்திய துணைக்கண்டத்தில் சுழற் பந்து "எறிந்து" முந்தியிருக்கிறார் முரளி. ஐசிசியின் அரைகுறை நடவடிக்கைகள் இம்மாதிரியான பந்து வீச்சாளர்களை மேலும் ஊக்குவிக்கிறது.முரளியின் தூஸ்ராவை மட்டும் தடை செய்யப்போகிறார்களாம். முரளி எப்போது தூஸ்ரா வீசுவார் என்பதை அம்பயர் எவ்வாறு கணிக்கப் போகிறார்?.இதுவரை முரளி தூஸ்ராவில் எடுத்த விக்கெட்டுக்களை அவரது கணக்கில் இருந்து நீக்குவார்களா?

இந்த பிரச்சனை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும், இல்லாவிடில் முரளி 800 விக்கெட் எடுப்பது உறுதி. "வார்னே" போன்ற உண்மையான வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் தவிர்க்கப்பட வேண்டும்.

No comments: