Friday, May 14, 2004

தேர்தல் முடிவும் புதிய தொடக்கமும்

கருத்துக்கணிப்புக்களில் சுட்டிக்காட்டப்பட்ட காங்கிரஸின் ஏறுமுகம், கிட்டத்தட்ட ஆட்சியை பிடிக்கும் அளவு வந்து விட்டது. இந்தியா போன்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசத்தில் மக்கள் அதிருப்தியை சம்பாதிக்காமல் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெல்வது இனிமேல் இயலாத காரியம் என்றுதான் தோன்றுகிறது.

பாஜகாவின் தோல்விக்கான காரணம் விரிவாக வல்லுனர்களால் அலசப்படும் முன், இந்த சாமான்யனின் கருத்துக்கள் சில.

மாநில தேர்தல்களில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாஜ்பேய் அலை வீசுகிறது என்று நம்பிய பாஜாகாவின் நம்பிக்கையில் மக்கள் போட்டது "மண்". வெங்கடேச பெருமாளின் அருளில் உயிர் தப்பியதை நினைத்து சந்தோசப்படுவதோடு நில்லாமல். அதை ஓட்டாக மாற்ற முயன்ற நாயுடுவின் தலையில் மக்கள் போட்டது 'இடி'.

ஆதரவு ஓட்டுக்களின் மூலமாக ஒரு ஆட்சி தேர்ந்தெடுக்கப்படாமல், ஒரு கட்சிக்கான எதிப்பு ஓட்டுக்கள் மூலமாக ஆட்சி அமையும் சூழல் ஆரோக்யமானதல்ல.இதன் மூலமாக,ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பல முறையோ ஆட்சி மாறுமே தவிர நாடு முன்னேறாது.

பாராளுமன்ற தேர்தலிலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி, இன்னும் எத்தனை வருடங்கள் வறுமை, உணவு, சாலை போன்ற விசயங்கள் பிரச்சனையாய் இருக்கப் போகிறது.இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை மக்கள் மாறி மாறி ஓட்டளித்து களைக்கப் போகிறார்கள்.

இந்த தேர்தலிலிருந்து ஒவ்வொரு கட்சியும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. கட்சிகள் கற்றுக் கொண்டனவா இல்லையா என்பது அடுத்த தேர்தலில் தெரிந்து விடும். தமிழக அளவில் இதனை அலசுகிறேன்.

அதிமுக:
அடக்குமுறை சட்டங்களால் மட்டும் ஆட்சியை நடத்தமுடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம்

இது. போலீசார்களால் போராட்ங்களை அடக்க முடியுமே தவிர தேர்தலில் வெற்றி பெறச்செய்ய முடியாது.ஜாதகங்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், அட்சயத் தீர்த்தியின் போது வேட்புமனு தாக்கல் செய்வது மட்டுமே வெற்றியை தந்து விடாது. இது பாராளுமன்ற தேர்தல்தான், சட்டமன்றத்தில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதெல்லாம் நொண்டிச் சமாதானம். நிதி நிலைமையை காரணம் காட்டி மக்கள் நலனை கிடப்பில் போடுவது சரியல்ல.நிதி நிலைமை சரியில்லாத போது செகரட்டேரியட் கட்ட பல கோடி ரூபாய் கடன் வாங்கியது என்ன நியாயம். இனி வரும் நாட்களில் ஜெயா என்ன செய்யப் போகிறார் என்பது சுவையான விசயம். மந்திரி சபை மாற்றம், IAS அதிகாரிகள் மாற்றம் என பல யூகங்கள். தனிப்பட்ட முறையில், குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை முதல்வரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

திமுக: சட்டமன்றத் தேர்தல் வரை மெகா கூட்டணீயை த்க்க வைப்பது கலைஞரின் அடுத்த சவால். இது சுலபமான பணி அல்ல.தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை எழுப்ப போகிறார் ராமதாஸ்.1980 ல் கிடைத்த பாராளுமன்ற வெற்றிக்குப் பின் திமுக-காங் கூட்டணியில் இது போன்ற ஒப்பந்தம் ஏற்பட்டு எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது.அதன்பின் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை தழுவியது திமுக. வரலாறுகளை மறக்க வேண்டாம் கலைஞர்.பாராளுமன்ற தேர்தல் தோல்வியே அம்மாவிற்கு அளித்த தண்டணை என மனம் மாறிவிடக்கூடும் மக்கள். ஜாக்கிரதை. மத்திய அரசின்உறவினை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.மாநில அரசை தொடர்ந்து குறை சொல்லாதீர்கள்.

காங்கிரஸ்: தலைவர்களின் எண்ணிக்கையை குறைத்து தொண்ட்ர்களின் எண்ணிக்கையை பெருக்குங்கள். நடக்காது என்றாலும் நப்ப்பாசை ருகிறது.மீண்டும் அம்மாவிடம் அடைக்கலம் காண காரணம் தேடாதீர்கள். அமைச்சர் பதவிக்கு அடித்துகொள்ள் தயாராகி விட்டதாக கேள்விப் பட்டேன். மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாத்துங்க சாமிகளா.

பாஜாக : காங்கிரஸ் தமிழகத்தில் இருந்து பின்பு பலம் குன்றிய கட்சி. உங்கள் கட்சியால் தொடப்படாத பல பகுதிகள் இன்னும் தமிழ் நாட்டில் உள்ளது. அம்மா பாசம் இந்த உண்மையை மறைத்தது. தேர்தல் முடிவுகள் உங்கள் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டது. அதிமுக கூட்டில் சுயமரியாதை இழந்ததுதான் மிச்சம். திருநாவுக்கரசருக்கு ரொம்ப சந்தோசம். எல்லா சானலுக்கும் ஓடிப்போய் தோற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.கட்சியின் அடிப்படை பலத்தை
பெருக்க வேண்டிய கட்டாயம் இக்கட்சிக்கு உள்ளது. மக்கள் பிரச்சனைகளுக்காக பாடுபடுங்கள்.அரசு ஊழியர்பிரச்சனையில் அம்மாவிற்குஅடித்த ஜால்ரா- ஸாரி கொஞ்சம் ஓவர். தமிழக அளவிலான தனிப்பட்ட அடையாளம்பாஜாகாவிற்கு வேண்டும்.ராமர் பிரச்சனையை வைத்து மட்டும் தமிழ்நாட்டில் வளர முடியாது.

தமிழக அளவில் மீதமுள்ள கட்சிகள் தேவையில்லை என்பது என் கருத்து. மதிமுக விரைவில் திமுகவின் அங்காமாகிவிடும். எப்படி என்று என்னைக் கேட்காதீர்கள்.பாமாக தேவையில்லாத கட்சி. இரண்டு திராவிடக்கட்சிகளும் கழட்டி விட்டால்டெபாசிட் தேறாது. ஆனால் மீண்டும் மீண்டும் அதிமுகவும், திமுகவும் பூனையை மடியில் கட்டுகின்றன. பேர சக்தியை வைத்துக் கொண்டு ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக நடத்தி வருகிறார் ராமதாஸ்.இவரை வளர்த்ததற்காக திமுக கொடுத்த விலையும், இனி கொடுக்கப் போகும் விலையும் மிக அதிகம்.

புதிய தொடக்கம்- நன்மையா தீமையா சின்னத்திரைகளில் காண்க ( சன் டிவி, ஜெயா டிவி மற்றும் தமிழன் டிவி)

No comments: