Tuesday, June 22, 2004

அல்பம்

ஐம்புலன் அடக்கி
இறைவன் முன்
நின்றாலும்
தான் கொடுத்த
தட்சணைக்கு
விபூதி பிரசாதம்
கூட்ட மிகுதியில்
தன்னை விடுத்து
அடுத்தவனுக்கு தந்துவிடுவானோ
என தவிக்கும் மனம்.

மெழுகுவர்த்தி

இடப்பட்ட
மரண தண்டணை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
மீண்டு வந்த
மின்சாரத்தால்

No comments: