Wednesday, July 21, 2004

பல்லிடை அவல்

கடன் கேட்ட குசேலனுக்கு
கண்ணனாய் இல்லாமல்
இல்லை என்று
சொல்லிவிட்டேன். 
பல்லிடை அவலாய்
உறுத்துகிறது.
"இப்பதான்முதன்முறையாய் பார்க்கிறேன்"
என்று சொல்லி
என் மகன் கையில்
அவன்
திணித்த ஐம்பது ரூபாய்.

No comments: