Wednesday, January 12, 2005

தாயாக முடியுமா?

எப்படி இருக்கிறாய்?

உண்மையை
சொல்ல இயலாத இக்கேள்வியை வைத்துத்தான்
தொடங்குகிறார்கள் உரையாடல்களை.

பெரும்பாலும் என் பதிலை
எதிர்பார்க்காமல்
உரையாடலை வளர்க்கிறார்கள்
அராஜகமாக.

எப்படியிருக்கிறாய் என்று
கேட்பதால் மட்டுமே
எல்லோரும் என் நலவிரும்பி
என நினைக்கமுடியாது.

பல லட்ச ரூபாய்
வணிக ஒப்பந்தத்தை
முறித்த வாடிக்கையாளனும்
அன்றைய தினம்எப்படியிருக்கிறாய்
என்றுதான்
என்னுடன் உரையாடலை துவக்கினான்.

நலமாயிருக்கிறேன்
என்ற சம்பிரதாயப் பதில்களில்
நிஜமிருந்ததில்லை எல்லா நாளும்.

என்னுடைய பதில்களின்
நிஜத்தை அறிய
அக்கறை இல்லை
பிறருக்கும்.

என்ன உனக்கு பொல்லாத அக்கறை?
என எதிர் கேள்வி கேட்க
தைரியமில்லை எனக்கும்.

நல்லாயிருக்கேன் என தொலைபேசியில்
பதில் சொன்னாலும்
குரலை வைத்தே
என்னடா தொண்டை கட்டியிருக்கா?
உடம்புக்கு ஒண்ணுமில்லையே?
என அக்கறைப்பட..

தாயாக முடியுமா அனைவராலும்?