Thursday, December 22, 2005

அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 1

இறை வணக்கம்

சீரடித் தென்றல் சாய்பாபா!
சிறப்பின் அற்புதம் சாய்பாபா!
தாரணி போற்றும் சாய்பாபா!
சங்கத் தமிழே சாய்பாபா!

நேர்மையின் உருவம் சாய்பாபா!
நெஞ்சம் வணங்கும் சாய்பாபா!
தாய்மையின் உள்ளம் சாய்பாபா!
தன்னிக ரில்லா சாய்பாபா!

பக்தரைக் காப்பார் சாய்பாபா!
பக்தியின் ஒளியே சாய்பாபா!
முக்தியைத் தருபவர் சாய்பாபா!
முற்றும் உணர்ந்தவர் சாய்பாபா!

அற்புதத் தருவே சாய்பாபா!
அகத்தில் நிறைந்தவர் சாய்பாபா!
பொற்பதம் சரணம் சாய்பாபா!
புவியின் வாழ்வே சாய்பாபா!

அவரை வணங்கி வாழ்ந்திடுவோம்!
அன்பும் அருளும் நாம் பெறுவோம்!
தவழும் குழந்தையைக் காப்பதுபோல்
தாயாய் நம்மைக் காத்திடட்டும்

கவியாக்கம்: கவிஞர் மதுரை பாபா

1 comment:

மணியன் said...

கவிதையில் கதை வரப் போகிறதா?