தவச்சான்றோனின் தன்னிகரற்ற வரலாறு
அருள்மிகு அன்னபாபா! அன்றாடம் வெண்பா
தரமாய் தழைத்துவர, சந்தம்- உரமாய்த்
திகழ்ந்திட உன்மேல் திளைத்தே படைக்க
அகங்குளிர ஆசிகளைத் தா.
மாவரைக்கும் கல் (சாய்சரிதம் பக்கம் 2-3)
கர்மம் எனஉணர்த்திக் காட்டுவதே கீழ்க்கல்!
பெருகிடும் பக்தியைப் பேணும்-ஒருநிலையே
மேற்கல்லாம்! பாபா விரல்பிடித்த கைப்பிடியோ
ஊற்றுநிகர் ஞானம்! உணர்.
பாபாவின் அற்புத சக்தி ( மாவரைத்த கல்லில் அரைத்த கோதுமை)
கோதுமை மாவையோ கொண்டுபோய் எல்லையிலே
ஈகையுடன் கொட்டுங்கள் என்றவுடன் - வேகமாகப்
பெண்மணிகள் கொட்டிவந்தார்! பேரழிவுக் காலராநோய்
எங்கோ மறைந்ததே! இங்கு.
சாய்பாபா வருகை ( பக்கம் 22)
சீர்டி காட்சி
கோபர்காங் ஏந்துகின்ற கோதா வரியாற்றை
தோதாய் கடந்தவுடன் தூயநகர்- வேதநகர்
சீர்டி வழிதன்னில் நிம்காங்வ் வருகிறது!
சீர்டி தெரிகிறது சேர்ந்து.
கவியாக்கம்: மதுரை பாபா
No comments:
Post a Comment