Friday, December 23, 2005

அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 2

தவச்சான்றோனின் தன்னிகரற்ற வரலாறு

அருள்மிகு அன்னபாபா! அன்றாடம் வெண்பா

தரமாய் தழைத்துவர, சந்தம்- உரமாய்த்

திகழ்ந்திட உன்மேல் திளைத்தே படைக்க

அகங்குளிர ஆசிகளைத் தா.

மாவரைக்கும் கல் (சாய்சரிதம் பக்கம் 2-3)

கர்மம் எனஉணர்த்திக் காட்டுவதே கீழ்க்கல்!

பெருகிடும் பக்தியைப் பேணும்-ஒருநிலையே

மேற்கல்லாம்! பாபா விரல்பிடித்த கைப்பிடியோ

ஊற்றுநிகர் ஞானம்! உணர்.

பாபாவின் அற்புத சக்தி ( மாவரைத்த கல்லில் அரைத்த கோதுமை)

கோதுமை மாவையோ கொண்டுபோய் எல்லையிலே

ஈகையுடன் கொட்டுங்கள் என்றவுடன் - வேகமாகப்

பெண்மணிகள் கொட்டிவந்தார்! பேரழிவுக் காலராநோய்

எங்கோ மறைந்ததே! இங்கு.

சாய்பாபா வருகை ( பக்கம் 22)

சீர்டி காட்சி

கோபர்காங் ஏந்துகின்ற கோதா வரியாற்றை

தோதாய் கடந்தவுடன் தூயநகர்- வேதநகர்

சீர்டி வழிதன்னில் நிம்காங்வ் வருகிறது!

சீர்டி தெரிகிறது சேர்ந்து.

கவியாக்கம்: மதுரை பாபா

No comments: