Monday, August 14, 2006

உறவுகள் (அல்லது) பூச்சி

மழைக்கால பின்னிரவில்
சரியாக மூட இயலா
சன்னல் கதவின் வழியேவந்தது
பெயர் தெரியா பூச்சி ஒன்று.

டிவியின் ஒளிர் திரையின்
மூலையில் அமர்ந்து கொண்டது
மெளனமாக.

நடுவில் அமர்ந்து
நான் பார்ப்பதை கெடுக்காமல்.

அருகில் சென்று அடித்திருக்கலாம்.
மூலையில்தானே இருக்கிறது என விட்டு விட்டேன்.

தினமும் இரவுகளில்
வரத்துவங்கியது அது.

அதன் பின்பு அதனுடன்
விளையாடத் தோன்றிற்று.
டிவியின் சத்தத்தை
அதிகரித்துப் பார்த்தேன்
அது பயப்பட்டு பறக்கிறதா என்று

அதிர்ச்சி அடைந்து
எழுந்து வந்த
குடும்ப நபர்களிடம்
அதற்கு காது கேட்காது
என்றேன்.
அவர்கள் மெளனமாக போய்விட்டார்கள்.

பின்பு ஒளிர்திரையின் வெளிச்சத்தை
மாற்றிப் பார்த்தேன்.
அது நகரவேயில்லை.

எப்போது டிவியைஅணைக்கிறேனோ
உடனே அது இடத்தை காலி செய்து விடும்.
நான் தூங்கப் போகிறேன் என்று தெரியுமோ என்னவோ?

தூக்கம் வராமல் டிவி பார்த்த நான்
பெயர் தெரியா பூச்சிக்காக தூங்காமல் டிவி பார்த்தேன்.

ஊர் செல்ல நேரிட்ட
இரு தினங்களுக்கு பின்பு
அதனைக் காணவில்லை.

சுவற்று பல்லி பிடித்து தின்றதா?
மிட்நைட் மசாலா பார்க்கும் போது யாரும் அடித்தார்களா?
இல்லை மழைக்காலம் முடிந்தது என்று பறந்து போய்விட்டதா?

மழைக்காலம் முடிந்ததால்தான் போயிருக்க வேண்டும்.
காத்திருந்தேன் அடுத்த மழைக்காலம் வரை.

மீண்டும் மழை.
சரியாக மூடாத சன்னல்.
உள்ளே வந்த பூச்சி
இம்முறை பலமாக கடித்தது.

7 comments:

Anu said...

ha ha nice one
talaippa pattu bayandutten :)

Unknown said...

Poochiyoda kooda uravu seriya amaya matengudhe?!!! Enumo ponga..hahaha....

Beautiful,funny poem.
Romba pidichudhu. Nalla karpanai.
Rasanai romba adhigamo?!

God Bless you
Nila

Unknown said...

Poochiyoda kooda uravu seriya amaya matengudhe?!!! Enumo ponga..hahaha....

Beautiful,funny poem.
Romba pidichudhu. Nalla karpanai.
Rasanai romba adhigamo?!

God Bless you
Nila

Unknown said...

Poochiyoda kooda uravu seriya amaya matengudhe?!!! Enumo ponga..hahaha....

Beautiful,funny poem.
Romba pidichudhu. Nalla karpanai.
Rasanai romba adhigamo?!

God Bless you
Nila

Unknown said...

Poochiyoda kooda uravu seriya amaya matengudhe?!!! Enumo ponga..hahaha....

Beautiful,funny poem.
Romba pidichudhu. Nalla karpanai.
Rasanai romba adhigamo?!

God Bless you
Nila

Aruna said...

அருமையான மழைக் காலத்தின் இனிமையான பூச்சி இது...!
அன்புடன் அருணா

மடல்காரன்_MadalKaran said...

really superb... !
very simple and your words has life and meaning..!

anbudan, Balu K.