Saturday, November 21, 2009

யதார்த்தம்

எழுதுபவர்களைக் காட்டிலும்
எழுத விரும்புவர்களால்
நிறைந்திருக்கிறது
உலகம்

காதலிப்பவர்களைக் காட்டிலும்
காதலிக்க துடிப்பவர்களால்
உயிர்த்திருக்கிறது
காதல்

நேசிக்கப்படுவதைக் காட்டிலும்
நேசிக்கப்படுவோம்
என்ற நம்பிக்கையில்தான்
சுழல்கிறது வாழ்க்கை.

6 comments:

Muruganandan M.K. said...

மனோவியல் கருத்தாளமுள்ள நல்ல கவிதை

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

venkat said...

நச்சுனு இருக்கு

Mookku Sundar said...

இதெல்லாம் சாத்தியமானவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை போய்விடுகிறதா.?

உன் அலைபேசி எண் கிடைத்தது. விரைவில் தொடர்பு கொள்ளுகிறேன்.

தமிழ் said...

நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

Arputham