Wednesday, October 30, 2019

யாருமில்லா தனியறையில்..

பரணில் கிடக்கும்
பழைய கவிதை நூலைப்போல
இந்த வலைப்பதிவு.

தூசிதட்டி நான் மட்டும் படிப்பேன்.
பிற்கு மீண்டும் பரணில் பத்திரமாக

இன்று யாரும் கவனிக்காத
 தனியறையாக
தனித்திருக்கிறது. புதிதாய் ஜனித்திருக்கிறது.

யாரும் வராத அறையில்
ரகசியங்களை உரக்கச் சொல்லலாம்.
புதிய ஒப்பனைகளை செய்து பார்க்கலாம்.
அஷ்டகோணத்தில் முகத்தை மாற்றி
பிம்பங்களை நோக்கலாம்.

யாரும் கவனிக்காததது
மிகப் பெரிய சுதந்திரந்தான்
மக்களே
யாருமில்லை என்ற நிலை உருவாகதவரை.

யாரும் கவனிக்காத எழுத்து
தன்னை தானே விமர்சித்துக் கொள்ளும் .
முதல் வாக்கியத்திற்கும்
மூன்றாம் வாக்கியத்திற்கும் ஏற்படும் மோதலில்
சொற்கள் சிதறி குழம்பி நிற்கும்.

என்றாவது வர நேர்ந்தால்
சிதறி கிடக்கும் சொற்களை சேர்த்து
உங்களுக்கு பிடித்தமான வாக்கியங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஏனெனில்
வாழ்வின் அர்த்தம் நமக்கு நாமே
கற்பித்துக் கொள்ளும் தத்துவமே தவிர
பிறரால் கூறப்படுவதல்ல.







No comments: