Wednesday, October 30, 2019
எதற்காக இழப்பீடு?
மணப்பாறை ஆழ்துளை கிணற்றில் குழந்தை வீழ்ந்து இறந்த சம்பவம் துயரம் மிக்கது எனினும், மனித கவனக்குறைவால் நிகழ்ந்த சம்பவம் என்பதை மறுக்க முடியாது. குழந்தையின் குடும்பத்தார் இந்த கவனக்குறைவான செயல்களை செய்துள்ளார்கள். ஆனால் இதே குடும்பத்தார்க்கு ஆளுங்கட்சியும், அரசாங்கமும் மற்றும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு நிதி உதவி வழங்குவது என்ன நியாயம் என்பது விளங்கவில்லை. அரசாங்கத்தின் தவறினால் பாதிப்புக்குள்ளாகி நியாயமான இழப்பீடு எதிர்நோக்கி பல குடும்பங்கள் காத்திருக்க, மீடியா வெளிச்சத்தில், அமைச்சர்கள் முன்னிலையில் நிகழ்ந்த துயரம் என்பதற்காக இந்த இழப்பீட்டை வழங்குவது முறையற்ற செயல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment