Wednesday, June 09, 2004

முரண்பாடு

எதிர்பாராத கோடை மழை
எல்லோருக்கும் சந்தோசம்.
முரண்பட்டு நின்றது
சில்லறைகளை எதிர்நோக்கி
காலில்லா ஓவியன்
வரைந்த ஆஞ்சனேயன்
கரைந்த சோகம்.

வசதி

கோவில் வாசல்
செருப்புக் காவலனின்
ஸ்நேகிதத்தை
புறக்கணித்து
காருக்குள்ளே
தங்கிவிட்டன
செருப்புகள்

No comments: