Saturday, August 21, 2004

முரசொலியால் அ (விம)ர்ச்சிக்கப்பட்ட குமுதம்

சென்ற வார குமுதத்தில் வெளியிடப்பட்ட டி. ஆர். பாலுவிற்கு நேர்ந்த கதி குறித்த கட்டுரைக்கு முரசொலியில் பதிலடி கொடுத்துள்ளார்கள். வழக்கம் போல இந்த வாரக் குமுதத்தில் அதை பிரசுரித்து விட்டார்கள். குமுதம் எந்த காலத்திலும் இவ்வகையான சம்பவங்களில் உணர்ச்சி வசப்பட்டது கிடையாது. " நாயே, பேயே" என திட்டி எழுதப்படும் கடிதங்களையும், ஹி..ஹி.. என்ற வார்த்தைகளுடன் பிரசுரித்து விடுவார்கள். இது குமுதத்தின் "Brand trait" ஆகவே அமைந்து விட்டது.

கலைஞர் முன்பெல்லாம் மாறன் எனது மனச்சாட்சி என்பார்.சென்ற வாரம் குமுதம் திமுக தொண்டர்களின் மனச்சாட்சியாக மாறிவிட்டது. இதைப் புறக்கணிப்பதனால் குமுதத்திற்கு நக்ஷ்டம் ஏற்படப் போவதில்லை. மாறாக தொண்டர்களின் உணர்வை மதிக்காத பாவத்தை, மீண்டும் செய்யப் போகிறார் கலைஞர். சினிமா மற்றும் கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கை என்று ஏதோ புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மையைப் போல குமுதத்தை பற்றி எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்து வெகுஜனப் பத்திரிக்கைகளும்
இதைத்தானய்யா செய்கிறார்கள் ( ஓரளவு குறைவு- கல்கியில்). முரசொலி வெளியிடும் குங்குமத்தில் இலக்கியம் மட்டுமா வெளியிடுகிறார்கள்? அசைவக் கதைகளுக்காக தனிப் பகுதி (கிளுகிளு பக்கம்) வெளியிட்ட பத்திரிக்கைதான் குங்குமம்.

உண்மைகள் சுடும் என்பார்கள். குமுதம் வெளியிட்ட உண்மை கலைஞரை வெகுவாக சுட்டு விட்டது. சுதாரித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அடுத்த தேர்தலில் மக்கள் வெகுவாக சுடுவார்கள்.மாநாடுகள் நடத்தி மட்டும் கட்சிகள் வள்ர்ந்ததெல்லாம் அந்த காலம். கூடும் கூட்டங்களைப் பார்த்து தப்பு கணக்கு போடாதீர்கள். உங்களுக்கு சொல்ல நான் யார். ஏதோ ஒரு சாமான்யன். குமுதத்தின் குரலே நாரசமாய் ஒளிக்கிறது.காலை வாரக் காத்திருக்கும் டாக்டர் அய்யா, உங்கள் சேலம் மாநாட்டிற்கு வந்து பாராட்டுவார். ( வருகிறாரா என்ன?) "தேன் தமிழ் பாயுது காதினிலே" என பெருமை பட்டுக் கொள்ளுங்கள்.

மக்கள் குரலைப் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அப்படித்தானே?

No comments: