Friday, August 27, 2004

வளர்ச்சி

மழையடிக்கும் இரவில்
நடுங்கிய படி
ஊளையிட்டது
செவளை நாய்.

குட்டியாய் இருந்த போது
வீட்டுக்குள் பாதுகாக்கப்பட்ட
பழைய நினைவுகளோடு..

வளர்ச்சிகள்
வளமைக்கான
அடையாளமாக மட்டும்
அமைவதில்லை
அனைத்து நிகழ்வுகளிலும்...

No comments: