Monday, January 10, 2005

சில கவிதைகள்

மாற்றம்


ஆறு மணிக்குகதவை சாத்தாதே
மகாலக்ஷ்மி வரும் நேரம் என்பாள்
அந்த காலத்தில் பாட்டி.

டெங்கு தரும் கொசுக்களுக்கு
பயந்து ஆறு மணிக்கு முன்பே
மூடப்பட்டு விடுகின்றன
வீட்டுக் கதவுகள்.

பார்வை மங்கிய
பாட்டிக்கு தெரியாது
கதவுகள் மூடப்படும ்சங்கதி.

யதார்த்தம்

தினம் நீர் ஊற்றிய
தாத்தா மறைந்த பின்பும்
பூக்கின்றன
ரோஜாச் செடிகள்

மதிப்பு

தற்கொலையா? படுகொலையா?
விசாரணை இல்லாமலேயே
அப்புறப்படுத்தவிட்டது
காப்பியில் விழுந்த கட்டெறும்பு.

அழுகின்ற குழந்தைக்கு

ஐந்து ரூபாய்க்கு
பலூன் வாங்கித் தர இயலா அளவு
பொருளாதாரப் பிரச்சனை இல்லைதான்.

ஆனாலும் பிதுங்கி வழியும்
29 சி ஏறி
பெரம்பூர் செல்லும்வரை
வெடிக்காமல் பலூனை பாதுகாக்க
வல்லமை இல்லாதவன் நான்.

எப்படி புரியவைக்க உனக்கு?

No comments: