அல்பம்
ஐம்புலன் அடக்கி
இறைவன் முன்
நின்றாலும்
தான் கொடுத்த
தட்சணைக்கு
விபூதி பிரசாதம்
கூட்ட மிகுதியில்
தன்னை விடுத்து
அடுத்தவனுக்கு தந்துவிடுவானோ
என தவிக்கும் மனம்.
மெழுகுவர்த்தி
இடப்பட்ட
மரண தண்டணை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
மீண்டு வந்த
மின்சாரத்தால்
Tuesday, June 22, 2004
Friday, June 11, 2004
ஞாபகம் வருதே..
நான் தவழும் பருவத்திலிருந்தே கைக்கு எட்டக் கூடியவையாக புத்தகங்கள் இருந்திருக்கின்றன. அப்பா, அம்மா, தாத்தா,பாட்டி என்று ஒரு குடும்பத்தில் எவ்வாறு பல அங்கத்தினர்கள் இருப்பார்களோ அதைப் போல அனைவரின் வீட்டிலும்புத்தகங்கள் இருக்கும் என்று சிறுவயதில் நினைத்ததுண்டு.சிந்து பைரவி படத்தில் பாலச்சந்தர் ஒரு வாரம் நகர்வதை கிழமைக்கு ஒன்றாக போடப்படும் பத்திரிக்கைகள் மூலமாக சிம்பாலிக்க்காக காண்பித்திருப்பார். எங்கள் வீட்டில் அதே போல் அனைத்து பத்திரிக்கைகளும் வாங்கப் பட்டன. இதைத் தவிர மாத சஞ்சிகைகள் ராணிமுத்து, அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் மற்றும் பல.திணமணி கதிர் முன்பு வாரப் பத்திரிக்கையாக வந்தது சிலருக்கு நினைவிருக்க்கலாம். 77ம் வருடம்ஜிம்மி கார்ட்டர் படம் அட்டையில் தாங்கி வந்த கதிர் இதழ் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
கற்பனை திறனை வளர்ப்பதில் புத்தகங்களுக்கு இணையான ஊடகம் வேறு எதுவும் இல்லை. சிறுவதிலேயே புத்தகம்படிக்கும் வழக்கம்/பழக்கம் உருவாகா விட்டால் பின்பு பழகுவது மிகவும் கடினம். இன்றைய சூழலின் தொலைக்காட்சி, கணணி என்ற பல ஊடக தாக்குதல் நடுவே, புத்தகம் படிப்பது சவாலான செயலாகத்தான் மாறி விட்டது.
இந்தப் பகுதியில் நான் கிளற விரும்புவது மாத நாவல்களை பற்றி. 70 களிலும் 80 களிலும் ராணி முத்துவும், மாலைமதியும்என்க்குத் தெரிந்த மாத நாவல்கள். இதைத் தவிர நவரத்னம் என்ற மாத நாவல் ஒன்று வரும், பெரும்பான்மையாக புஷ்பா தங்கத்துரையின் "சிங்" கதைகளை தாங்கி. சிங் இந்திய லெவெல் ஜேம்ஸ்பாண்ட். துப்பறிவதில் மட்டுமல்ல. பார்க்கும் பெண்களுடன் படுக்கைக்கு போவதிலும் கூட. இவருடைய கதைகளைப் பற்றி தனியாக பேசுவோம்.
இன்று ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படும் பல நாவல்கள் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட மாலைமதியிலும்,ராணிமுத்துவிலும் வந்தவை என்பது ஆச்சரியத்திற்கு உரிய விசயமாக இருக்கும். பீக்ஷ்மர் சுஜாதாவின் நைலான்கயிறு சுருக்கப் பட்டு ராணி முத்துவில் வந்தது. ஆனால் நான் படித்தது அதற்கு முன் யாரோ வெளியிட்ட சித்திரக் கதை வடிவத்தில். லக்ஷ்மி, ரா.கி.ரா, புனிதன்,சுஜாதா,ராஜேந்திரக்குமார்,விமலாரமணி,சிவசங்கரி, வாஸந்தி, பேய்கதை கிருக்ஷ்ணக்குமார் என்று எழுதுவதற்கு பலர் இருக்க, நாவல் படிப்பது மிகவும் சுவையான அனுபவமாக இருந்தது.சுஜாதாவின் " விபரீத கோட்பாடுகள்"," மேகத்தை துரத்தினவன்" மாலைமதியிலும், " என்றாவது ஒருநாள்" மற்றும் சமீபத்தில்திரைபடமாக்கப்பட்ட "நிலா"ராணிமுத்துவிலும் மாத நாவலாக வந்தது. ரஜினியின் "புவனா ஒரு கேள்விக்குறி" படமும் , "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படமும் மகரிக்ஷ¢யினால் மாலைமதியில் எழுதப்பட்ட மாத நாவல்கள்.இன்னும் பல இருக்கலாம். என் நினைவுகளில் இருப்பவை இவை மட்டுமே.
இதன் பின்னால்குங்குமம்பத்திரிக்கைக்காரர்கள் "மோனா" என்று ஒரு மாத நாவலை ஆரம்பித்தார்கள். 80களின் மத்தியில்திடீரென பத்திரிக்கைகளும், மாத நாவல்களும் பெருகி விட்டன. மாத நாவல்களும் மாதத்திற்கு இருமுறையாக வரத்துவங்கின. புதிய எழுத்தாளர்கள் வந்ததில் தரம் குறையத் துவங்கியது. ஹேமா ஆனந்த தீர்த்தனும், கோவிமணிசேகரனும் ( இவர் சமூகக் கதை எழுதி) மிகவும் தொல்லை கொடுத்து வந்தார்கள்.அவ்வப்போது விமலாரமணி அழகான காதல் கதைகள் எழுதி வந்தார்.பின்பு அசோகனால் வந்ததய்யா பாக்கெட் நாவல் புரட்சி. ஒன்னு ரெண்டு கொன்னுடு, ஹலோ டெட் மார்னிங் என்று ராஜேக்ஷ்குமாரை வைத்து தூள் பரத்த ஆரம்பித்தார். சுபா ஒரு பாக்கெட் நாவலில் எழுதி கொண்டிருந்தார். சுபாவின் நாவலின் அட்டைப்பட புகைப்படங்கள் அருமையாக இருக்கும். உள்ளே படம் எப்படி, எந்த கேமராவை வைத்து எடுக்கப்பட்டது என்ற டெக்னிக்கல் விளக்கங்களும் இருக்கும். அதை எடுத்த புகைப்படக்காரர்தான் தற்பொழுது பிரபலமாய் இருக்கும் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் ( முதல்வன் மற்றும் சமீபத்தில் வந்த "காக்கி") என்று சொன்னால் பலர் ஆச்சரியப் படலாம்.
பாக்கெட் புத்தகங்கள் பல்கிப் பெருகியதில், பழைய சுவையும் தரமும் காணாமல் போனது. இதைப் பற்றிய கோபத்தை சுஜாதா வெளிப்படுத்தி அசோகனின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொண்டார்.இன்றும் மாலைமதியும், ராணிமுத்துவும் வருகிறது என நினைக்கிறேன். கடைகளில் பிரதானமாக தொங்குவதில்லை. மதுரையிலிருந்து காரைகுடிக்கு போகும் பஸ்ஸில் அஞ்சு ரூபாய்க்கு மூன்று என நாவல்கள் கிடைக்கின்றன.பெரும்பாலான நாவல்கள் இழுக்கப்பட்ட சிறுகதைகள்.
கொஞ்ச காலம் முன்பு சுஜாதாவின் விபரீத கோட்பாடு ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது. உடனே வாங்கி விட்டேன். பழைய மாத நாவல்களைப் பார்த்தால் உடனே வாங்குவதாக உத்தேசம். பழைய நினைவுகளில் பயணிப்பதற்காக.
நான் தவழும் பருவத்திலிருந்தே கைக்கு எட்டக் கூடியவையாக புத்தகங்கள் இருந்திருக்கின்றன. அப்பா, அம்மா, தாத்தா,பாட்டி என்று ஒரு குடும்பத்தில் எவ்வாறு பல அங்கத்தினர்கள் இருப்பார்களோ அதைப் போல அனைவரின் வீட்டிலும்புத்தகங்கள் இருக்கும் என்று சிறுவயதில் நினைத்ததுண்டு.சிந்து பைரவி படத்தில் பாலச்சந்தர் ஒரு வாரம் நகர்வதை கிழமைக்கு ஒன்றாக போடப்படும் பத்திரிக்கைகள் மூலமாக சிம்பாலிக்க்காக காண்பித்திருப்பார். எங்கள் வீட்டில் அதே போல் அனைத்து பத்திரிக்கைகளும் வாங்கப் பட்டன. இதைத் தவிர மாத சஞ்சிகைகள் ராணிமுத்து, அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் மற்றும் பல.திணமணி கதிர் முன்பு வாரப் பத்திரிக்கையாக வந்தது சிலருக்கு நினைவிருக்க்கலாம். 77ம் வருடம்ஜிம்மி கார்ட்டர் படம் அட்டையில் தாங்கி வந்த கதிர் இதழ் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
கற்பனை திறனை வளர்ப்பதில் புத்தகங்களுக்கு இணையான ஊடகம் வேறு எதுவும் இல்லை. சிறுவதிலேயே புத்தகம்படிக்கும் வழக்கம்/பழக்கம் உருவாகா விட்டால் பின்பு பழகுவது மிகவும் கடினம். இன்றைய சூழலின் தொலைக்காட்சி, கணணி என்ற பல ஊடக தாக்குதல் நடுவே, புத்தகம் படிப்பது சவாலான செயலாகத்தான் மாறி விட்டது.
இந்தப் பகுதியில் நான் கிளற விரும்புவது மாத நாவல்களை பற்றி. 70 களிலும் 80 களிலும் ராணி முத்துவும், மாலைமதியும்என்க்குத் தெரிந்த மாத நாவல்கள். இதைத் தவிர நவரத்னம் என்ற மாத நாவல் ஒன்று வரும், பெரும்பான்மையாக புஷ்பா தங்கத்துரையின் "சிங்" கதைகளை தாங்கி. சிங் இந்திய லெவெல் ஜேம்ஸ்பாண்ட். துப்பறிவதில் மட்டுமல்ல. பார்க்கும் பெண்களுடன் படுக்கைக்கு போவதிலும் கூட. இவருடைய கதைகளைப் பற்றி தனியாக பேசுவோம்.
இன்று ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படும் பல நாவல்கள் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட மாலைமதியிலும்,ராணிமுத்துவிலும் வந்தவை என்பது ஆச்சரியத்திற்கு உரிய விசயமாக இருக்கும். பீக்ஷ்மர் சுஜாதாவின் நைலான்கயிறு சுருக்கப் பட்டு ராணி முத்துவில் வந்தது. ஆனால் நான் படித்தது அதற்கு முன் யாரோ வெளியிட்ட சித்திரக் கதை வடிவத்தில். லக்ஷ்மி, ரா.கி.ரா, புனிதன்,சுஜாதா,ராஜேந்திரக்குமார்,விமலாரமணி,சிவசங்கரி, வாஸந்தி, பேய்கதை கிருக்ஷ்ணக்குமார் என்று எழுதுவதற்கு பலர் இருக்க, நாவல் படிப்பது மிகவும் சுவையான அனுபவமாக இருந்தது.சுஜாதாவின் " விபரீத கோட்பாடுகள்"," மேகத்தை துரத்தினவன்" மாலைமதியிலும், " என்றாவது ஒருநாள்" மற்றும் சமீபத்தில்திரைபடமாக்கப்பட்ட "நிலா"ராணிமுத்துவிலும் மாத நாவலாக வந்தது. ரஜினியின் "புவனா ஒரு கேள்விக்குறி" படமும் , "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படமும் மகரிக்ஷ¢யினால் மாலைமதியில் எழுதப்பட்ட மாத நாவல்கள்.இன்னும் பல இருக்கலாம். என் நினைவுகளில் இருப்பவை இவை மட்டுமே.
இதன் பின்னால்குங்குமம்பத்திரிக்கைக்காரர்கள் "மோனா" என்று ஒரு மாத நாவலை ஆரம்பித்தார்கள். 80களின் மத்தியில்திடீரென பத்திரிக்கைகளும், மாத நாவல்களும் பெருகி விட்டன. மாத நாவல்களும் மாதத்திற்கு இருமுறையாக வரத்துவங்கின. புதிய எழுத்தாளர்கள் வந்ததில் தரம் குறையத் துவங்கியது. ஹேமா ஆனந்த தீர்த்தனும், கோவிமணிசேகரனும் ( இவர் சமூகக் கதை எழுதி) மிகவும் தொல்லை கொடுத்து வந்தார்கள்.அவ்வப்போது விமலாரமணி அழகான காதல் கதைகள் எழுதி வந்தார்.பின்பு அசோகனால் வந்ததய்யா பாக்கெட் நாவல் புரட்சி. ஒன்னு ரெண்டு கொன்னுடு, ஹலோ டெட் மார்னிங் என்று ராஜேக்ஷ்குமாரை வைத்து தூள் பரத்த ஆரம்பித்தார். சுபா ஒரு பாக்கெட் நாவலில் எழுதி கொண்டிருந்தார். சுபாவின் நாவலின் அட்டைப்பட புகைப்படங்கள் அருமையாக இருக்கும். உள்ளே படம் எப்படி, எந்த கேமராவை வைத்து எடுக்கப்பட்டது என்ற டெக்னிக்கல் விளக்கங்களும் இருக்கும். அதை எடுத்த புகைப்படக்காரர்தான் தற்பொழுது பிரபலமாய் இருக்கும் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் ( முதல்வன் மற்றும் சமீபத்தில் வந்த "காக்கி") என்று சொன்னால் பலர் ஆச்சரியப் படலாம்.
பாக்கெட் புத்தகங்கள் பல்கிப் பெருகியதில், பழைய சுவையும் தரமும் காணாமல் போனது. இதைப் பற்றிய கோபத்தை சுஜாதா வெளிப்படுத்தி அசோகனின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொண்டார்.இன்றும் மாலைமதியும், ராணிமுத்துவும் வருகிறது என நினைக்கிறேன். கடைகளில் பிரதானமாக தொங்குவதில்லை. மதுரையிலிருந்து காரைகுடிக்கு போகும் பஸ்ஸில் அஞ்சு ரூபாய்க்கு மூன்று என நாவல்கள் கிடைக்கின்றன.பெரும்பாலான நாவல்கள் இழுக்கப்பட்ட சிறுகதைகள்.
கொஞ்ச காலம் முன்பு சுஜாதாவின் விபரீத கோட்பாடு ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது. உடனே வாங்கி விட்டேன். பழைய மாத நாவல்களைப் பார்த்தால் உடனே வாங்குவதாக உத்தேசம். பழைய நினைவுகளில் பயணிப்பதற்காக.
Wednesday, June 09, 2004
Saturday, June 05, 2004
பரணலிருந்து மற்றுமொன்று
வேண்டுகோள்
இந்த இடத்தில்
முன்பு நதிகள் ஓடின..
வண்டல் மண் சேர்ந்து
தென்னை வளர்ந்தன.
கவிதைகளும் கதைகளுமாக
பூங்கா ஒன்றிருந்தது
வானத்து முழுநிலவாய்
காதல் ஒன்றிருந்தது.
எங்கே தொலைத்தேன்
என் பிரபஞ்சத்தை?
என்னை விடுத்து அதை மட்டும்
யார் எடுத்துக் கொண்டது?
புகையும் புழுதியும்
வாகனமும் நிறைந்த
தெருக்களில்
விள்க்குகளின் நிறங்களிடம்
அனுமதி கேட்டு சாலை கடக்க..
மனிதனின் நிறங்கள்
மாறித்தான் போனது.
ஓட்டை பையில் சேர்த்த
சில்லறைக் காசுகளா
என் பழைய சந்தோக்ஷம்?
மழை பெய்து
மாமாங்கம் ஆகியும்
உடல் இன்னும் ஈரமாயுள்ளது.
இது பழைய மழையின்
காயாத ஈரமா?
புதிய வெயிலில்
சுரந்த வியர்வையா?
சுமக்க சுமக்க
ஞாபகமும் சிலுவையாகும்.
அடிக்க அடிக்க
பாறைகளும் சிதறிப்போகும்.
இறைவனே!
அஸ்திவாரக் கற்களில்
கல்லறை கட்டாதே.
உயிருடன் மரிப்பதை
எனக்கிங்கே உணர்த்தாதே.
கண்டுபிடித்து தா.
நதிகளை, தென்னையை,
பூங்காவை,
முழுநிலவாய்
என் காதலை..
வேண்டுகோள்
இந்த இடத்தில்
முன்பு நதிகள் ஓடின..
வண்டல் மண் சேர்ந்து
தென்னை வளர்ந்தன.
கவிதைகளும் கதைகளுமாக
பூங்கா ஒன்றிருந்தது
வானத்து முழுநிலவாய்
காதல் ஒன்றிருந்தது.
எங்கே தொலைத்தேன்
என் பிரபஞ்சத்தை?
என்னை விடுத்து அதை மட்டும்
யார் எடுத்துக் கொண்டது?
புகையும் புழுதியும்
வாகனமும் நிறைந்த
தெருக்களில்
விள்க்குகளின் நிறங்களிடம்
அனுமதி கேட்டு சாலை கடக்க..
மனிதனின் நிறங்கள்
மாறித்தான் போனது.
ஓட்டை பையில் சேர்த்த
சில்லறைக் காசுகளா
என் பழைய சந்தோக்ஷம்?
மழை பெய்து
மாமாங்கம் ஆகியும்
உடல் இன்னும் ஈரமாயுள்ளது.
இது பழைய மழையின்
காயாத ஈரமா?
புதிய வெயிலில்
சுரந்த வியர்வையா?
சுமக்க சுமக்க
ஞாபகமும் சிலுவையாகும்.
அடிக்க அடிக்க
பாறைகளும் சிதறிப்போகும்.
இறைவனே!
அஸ்திவாரக் கற்களில்
கல்லறை கட்டாதே.
உயிருடன் மரிப்பதை
எனக்கிங்கே உணர்த்தாதே.
கண்டுபிடித்து தா.
நதிகளை, தென்னையை,
பூங்காவை,
முழுநிலவாய்
என் காதலை..
பரணிலிருந்து சில
"அப்பா" பற்றிய இரண்டு அருமையான கவிதைகளை வலைப் பதிந்திருந்தார் நண்பர் சுந்தர்ராஜன். நண்பர் பாலா திருச்சி அய்யப்பன் கோவிலில் பார்த்ததாக வலை பதிந்திருந்த அப்பாவைப் பற்றிய வாசகங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.நான்என் தந்தையை இழந்து பதினேழு வருடங்கள் ஆகி விட்டன.ஆனால் இன்னும் அவருக்கு கால் பிடித்து விட்ட ஸ்பரிச உணர்வுகள் விரல்களில் தேங்கி நிற்கிறது.கடமையை முழுவதும் செய்யாமல் மரித்துப் போகிறாமே என்ற தகப்பனின்சோகம் ஒரு ஆணுக்கு நிகழக் கூடிய உச்ச பட்ச கொடுமை. அவ்வாறான சோகத்தோடு அவர் மரித்த போது எனக்கு 17 வயது, நான் +1 படித்துக் கொண்டிருந்தேன்.
நான் எழுதிக் குவித்ததைக் காட்டிலும் , எழுதித் தொலைத்தவை அதிகம் என்று வலம்புரி ஜான் அடிக்கடி எழுதுவார்.எனக்கும் இது பொருந்தும் ( அதற்காக அவரைப் போல் திறமையானவன் நான் என்று சொல்லவில்லை). பள்ளிப் பருவத்தில்எழுதிய கவிதைகள் பல நான் சேகரித்து வைக்கவில்லை. என் அப்பா மரித்த சமயத்தில் நான் எழுதிய கவிதை ஒன்று, என்
அம்மாவால் பத்திரப்படுத்தப் பட்டு தற்போது எனக்கு கிடைத்தது. என் அப்பாவின் பச்சை மை பேனாவால் எழுதிய கவிதை.சிதிலமடைந்த தாளில் எப்போது வேண்டுமானாலும் அழிந்து விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. என் ஆத்ம திருப்திக்காக அதை இங்கு பதிவு செய்கிறேன். இது 1987ம் ஆண்டு எழுதிய கவிதை.பதினோராம் வகுப்பு மாணவனுக்கே உரிய அறியாமையுடனும், ஆதங்கத்துடனும், பயத்துடனும் இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது என நான் நினைக்கிறேன்.
கவிதையின் படிவமும், தொனியும் கூட பழமையானதே.
எங்கே நீ?
எங்கள் கூட்டின்
தலைமைப் பறவையே!
எங்கே நீ?
. . .
எங்கள் விடியல்கள்
சூரியனை தொலைத்துவிட்டு
அழுகின்றன.
பகலுக்கு பதில் சொல்ல முடியாமல்
இருட்டினிலே புகல் தேடுகின்றன.
. . .
நோயுடன் நீ நடத்திய
சாத்வீகப் போரில்
நோய்க்கு பதில்
உனக்கு ஏன் விடுதலை
கிடைத்தது?
. . .
எங்கள் நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை ஆதரவு பெற்ற
மசோதாக்கள் மட்டுமே
நிறைவேறும் போது
அந்த
இறைவனின் மன்றத்தில்
ஆதரவே பெறாத
உன் மரண மசோதா மட்டும்
எப்படி சட்டமாகியது?
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான ஆட்சியாளன்..
. . .
ஆணிவேர் இழந்த
ஆலமரங்கள்
எதிகால பூகம்பங்களை
எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?
. . .
எங்கள் நீதி மன்ற்ங்களில்
விசாரணைகள் முடிந்தும்
தீர்ப்பெழுத நாளாகும் போது
இறைவனின் மன்றத்தில்
மட்டும் உன்னை விசாரிக்காமலே
தீர்ப்பளித்து விட்டார்கள்.
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான நீதிபதி..
. . .
மரணமே!
மண்ணும் அக்கினியும்
உன் குழந்தைகளா?
அவர்களுக்காக நீ
மனித இரை தேடுகிறாயா?
உன் குழந்தைகளுக்காக
பாடுபடும் நீ
உனக்கு பலியாகுபவர்களின்
குழந்தைகளைப் பற்றி
நினைத்துப் பார்த்தாயா?
. . .
மனிதர்களின் கதைகளில்
முடிவுகள் வேறுபடும் போது
ஆண்டவன் எழுதும்
கதைகளில் மட்டும்
ஏன் ஒரே அழுகை முடிவு?
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான கதாசிரியனும் கூட..
-ராஜ்குமார்
"அப்பா" பற்றிய இரண்டு அருமையான கவிதைகளை வலைப் பதிந்திருந்தார் நண்பர் சுந்தர்ராஜன். நண்பர் பாலா திருச்சி அய்யப்பன் கோவிலில் பார்த்ததாக வலை பதிந்திருந்த அப்பாவைப் பற்றிய வாசகங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.நான்என் தந்தையை இழந்து பதினேழு வருடங்கள் ஆகி விட்டன.ஆனால் இன்னும் அவருக்கு கால் பிடித்து விட்ட ஸ்பரிச உணர்வுகள் விரல்களில் தேங்கி நிற்கிறது.கடமையை முழுவதும் செய்யாமல் மரித்துப் போகிறாமே என்ற தகப்பனின்சோகம் ஒரு ஆணுக்கு நிகழக் கூடிய உச்ச பட்ச கொடுமை. அவ்வாறான சோகத்தோடு அவர் மரித்த போது எனக்கு 17 வயது, நான் +1 படித்துக் கொண்டிருந்தேன்.
நான் எழுதிக் குவித்ததைக் காட்டிலும் , எழுதித் தொலைத்தவை அதிகம் என்று வலம்புரி ஜான் அடிக்கடி எழுதுவார்.எனக்கும் இது பொருந்தும் ( அதற்காக அவரைப் போல் திறமையானவன் நான் என்று சொல்லவில்லை). பள்ளிப் பருவத்தில்எழுதிய கவிதைகள் பல நான் சேகரித்து வைக்கவில்லை. என் அப்பா மரித்த சமயத்தில் நான் எழுதிய கவிதை ஒன்று, என்
அம்மாவால் பத்திரப்படுத்தப் பட்டு தற்போது எனக்கு கிடைத்தது. என் அப்பாவின் பச்சை மை பேனாவால் எழுதிய கவிதை.சிதிலமடைந்த தாளில் எப்போது வேண்டுமானாலும் அழிந்து விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. என் ஆத்ம திருப்திக்காக அதை இங்கு பதிவு செய்கிறேன். இது 1987ம் ஆண்டு எழுதிய கவிதை.பதினோராம் வகுப்பு மாணவனுக்கே உரிய அறியாமையுடனும், ஆதங்கத்துடனும், பயத்துடனும் இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது என நான் நினைக்கிறேன்.
கவிதையின் படிவமும், தொனியும் கூட பழமையானதே.
எங்கே நீ?
எங்கள் கூட்டின்
தலைமைப் பறவையே!
எங்கே நீ?
. . .
எங்கள் விடியல்கள்
சூரியனை தொலைத்துவிட்டு
அழுகின்றன.
பகலுக்கு பதில் சொல்ல முடியாமல்
இருட்டினிலே புகல் தேடுகின்றன.
. . .
நோயுடன் நீ நடத்திய
சாத்வீகப் போரில்
நோய்க்கு பதில்
உனக்கு ஏன் விடுதலை
கிடைத்தது?
. . .
எங்கள் நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை ஆதரவு பெற்ற
மசோதாக்கள் மட்டுமே
நிறைவேறும் போது
அந்த
இறைவனின் மன்றத்தில்
ஆதரவே பெறாத
உன் மரண மசோதா மட்டும்
எப்படி சட்டமாகியது?
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான ஆட்சியாளன்..
. . .
ஆணிவேர் இழந்த
ஆலமரங்கள்
எதிகால பூகம்பங்களை
எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?
. . .
எங்கள் நீதி மன்ற்ங்களில்
விசாரணைகள் முடிந்தும்
தீர்ப்பெழுத நாளாகும் போது
இறைவனின் மன்றத்தில்
மட்டும் உன்னை விசாரிக்காமலே
தீர்ப்பளித்து விட்டார்கள்.
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான நீதிபதி..
. . .
மரணமே!
மண்ணும் அக்கினியும்
உன் குழந்தைகளா?
அவர்களுக்காக நீ
மனித இரை தேடுகிறாயா?
உன் குழந்தைகளுக்காக
பாடுபடும் நீ
உனக்கு பலியாகுபவர்களின்
குழந்தைகளைப் பற்றி
நினைத்துப் பார்த்தாயா?
. . .
மனிதர்களின் கதைகளில்
முடிவுகள் வேறுபடும் போது
ஆண்டவன் எழுதும்
கதைகளில் மட்டும்
ஏன் ஒரே அழுகை முடிவு?
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான கதாசிரியனும் கூட..
-ராஜ்குமார்
Thursday, June 03, 2004
Subscribe to:
Posts (Atom)